Categories
மாநில செய்திகள்

தமிழகம் அருகே வந்தது புயல்…. Yellow alert….. வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை….!!!!

தமிழகத்தின் கடந்த அக்டோபர் 30ம் தேதி வடகிழக்கு பருவமழை தொடங்கிய நிலையில் பல்வேறு மாவட்டங்களில் தொடர்ந்து பரவலாக மழை பெய்து வருகிறது. அதே சமயம் கடந்த வாரம் வங்க கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானதால் சென்னை மற்றும் செங்கல்பட்டு உள்ளிட்ட பல மாவட்டங்களில் தொடர்ந்து கனமழை பெய்ததால் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கும் தொடர் விடுமுறைகள் அறிவிக்கப்பட்டது. இதனிடையே  தென்கிழக்குவங்க கடலில் உருவான ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி தற்போது காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றுள்ளது.

இந்நிலையில் தமிழகத்தில் இன்று நான்கு மாவட்டங்களுக்கு கனமழைக்கான மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. வங்கக்கடலில் நிலை கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் தமிழகத்திற்கு அருகில் வந்ததால் திருவள்ளூர், காஞ்சிபுரம்,ராணிப்பேட்டை மற்றும் வேலூர் ஆகிய மாவட்டங்களுக்கும் மஞ்சள் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்த மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை அளிப்பது குறித்த எந்த ஒரு அறிவிப்பும் வெளியாகவில்லை.

Categories

Tech |