Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

மொபட் மீது மோதிய லாரி…. கோர விபத்தில் பலியான இளம்பெண்…. சோகத்தில் குடும்பத்தினர்…!!!

மொபட் மீது லாரி மோதிய விபத்தில் இளம்பெண் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஈரோடு மாவட்டத்திலுள்ள அந்தியூர் தவிட்டுப்பாளையம் பகுதியில் தங்கராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு லதா மணி என்ற மனைவி இருந்துள்ளார் இந்த தம்பதியினருக்கு ஒரு மகனும், ஒரு மகளும் இருக்கின்றனர். இந்நிலையில் லதா தனது மொபட்டில் வீட்டிலிருந்து அந்தியூர் செல்ல புறப்பட்டுள்ளார். இவர் பவானி-அந்தியூர் மெயின் ரோட்டில் அரசு மருத்துவமனை அருகே சென்ற போது அவ்வழியாக வேகமாக வந்த லாரி லதாவின் மொபட் மீது பயங்கரமாக மோதியது.

இந்த விபத்தில் படுகாயமடைந்த லதா சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து தகவலறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற லதாவின் உடலை மீட்டு பவானி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Categories

Tech |