Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

செல்போனில் விளையாடிய 3 வயது குழந்தை…. நொடியில் பறிபோன உயிர்….. கதறும் குடும்பத்தினர்….!!

கிணற்றில் தவறி விழுந்து 3 வயது குழந்தை உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கடலூர் மாவட்டத்தில் உள்ள மங்களூர் பகுதியில் ராஜ்குமார்- சங்கீதா தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு ரிஷ்மிதா என்ற மகள் இருந்துள்ளார். நேற்று சங்கீதா தனது மகள், மாமனார், மாமியாருடன் அப்பகுதியில் இருக்கும் வயலுக்கு சென்றுள்ளார். இந்நிலையில் குழந்தையிடம் ஒரு செல்போனை கொடுத்து தனியாக உட்கார வைத்துவிட்டு 3 பேரும் வயலில் இறங்கி வேலை பார்த்துக் கொண்டிருந்தனர். அப்போது செல்போனில் விளையாடி கொண்டே நடந்து சென்ற குழந்தை 20 அடி ஆழமுடைய கிணற்றில் எதிர்பாராதவிதமாக தவறி விழுந்தது.

இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த சங்கீதா உட்பட அனைவரும் குழந்தையை மீட்க முயற்சி செய்தும் அவர்களால் இயலவில்லை. இதுகுறித்து தகவலறிந்த தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று 2 மணி நேர போராட்டத்திற்கு பிறகு குழந்தையின் உடலை மீட்டனர். பின்னர் குழந்தையின் உடல் விருதாச்சலம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது. இதுகுறித்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Categories

Tech |