Categories
மாநில செய்திகள்

மதுரை மத்திய சிறைச்சாலையில்…. டிஜிபி அம்ரேஷ் பூஜாரி திடீர் ஆய்வு….. கைதிகளிடம் குறை கேட்பு…..!!!!

மதுரை மத்திய சிறைச்சாலையில் சிறைத் துறை டி.ஜி.பி கைதிகளிடம் குறைகளை கேட்டு ஆய்வு மேற்கொண்டார்.

தமிழக சிறைத்துறை டிஜிபி ஆக அம்ரேஷ் பூஜாரி சென்ற 4-ம் தேதி பொறுப்பேற்றது முதல் சிறைத்துறையில் பல அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறாா். அதன் ஒருபகுதியாக அவா் தமிழகத்தின் முக்கியமான சிறைச்சாலைகளில் திடீரென்று ஆய்வு செய்து வருகிறார். இந்நிலையில் மதுரை மத்திய சிறைச்சாலையில் சிறைத்துறை டிஜிபி அம்ரேஷ் பூஜாரி இன்று ஆய்வு மேற்கொண்டார். மதுரை சிறையில் கைதிகள் அடைக்கப்படும் பகுதி, நூலகம், மருத்துவமனை, தொழிலகம் உட்பட பல பகுதிகளை பாா்வையிட்டாா்.

அதன்பின் கைதிகளுக்கு உணவு தயாா்செய்யப்படும் பகுதிக்கு சென்று, அங்கு சுகாதாரமான முறையில் உணவு தயாரிப்பது மற்றும் கைதிகளால் தயாரிக்கப்படும் பொருட்கள் உள்ளிட்டவற்றை டிஜிபி சோதனை செய்தார். சிறைவளாகத்தில் தண்டனைக் கைதிகள் அடைக்கப்பட்டு இருக்கும் அறை, விசாரணைக் கைதிகள் அடைக்கப்பட்டிருக்கும் அறை, பெண்கள் தனிச்சிறை போன்றவற்றையும் ஆய்வு மேற்கொண்டார்.  முன்பாக டிஜிபி அம்ரேஷ் பூஜாரி புழல்சிறையில் ஆய்வு மேற்கொண்டு கைதிகளுடன் அமர்ந்து உணவு அருந்தினார். இவர் சிறைத் துறையில் பல குறிப்பிடத்தக்க நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்.

Categories

Tech |