தமிழகத்தின் கடந்த அக்டோபர் 30ம் தேதி வடகிழக்கு பருவமழை தொடங்கிய நிலையில் பல்வேறு மாவட்டங்களில் தொடர்ந்து பரவலாக மழை பெய்து வருகிறது. அதே சமயம் கடந்த வாரம் வங்க கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானதால் சென்னை மற்றும் செங்கல்பட்டு உள்ளிட்ட பல மாவட்டங்களில் தொடர்ந்து கனமழை பெய்ததால் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கும் தொடர் விடுமுறைகள் அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் தென்கிழக்குவங்க கடலில் உருவான ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி தற்போது காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றுள்ளது. இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் அடுத்த இரண்டு நாட்களில் மேற்கு மற்றும் வடமேற்கு திசையில் நகர்ந்து தமிழகம் மற்றும் புதுச்சேரி, ஆந்திரா நோக்கி நகரக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில் தமிழகத்தில் இன்று மாலை முதல் மழை பெய்ய தொடங்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நாளை சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், ராணிப்பேட்டை மற்றும் திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளது. நவம்பர் 22 ஆம் தேதி வட தமிழகத்தில் பெரும்பாலான இடங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.