Categories
சேலம் மாவட்ட செய்திகள்

கல்லூரி அருகே நின்று பேசிய நண்பர்கள்…. தாக்குதல் நடத்திய மர்ம கும்பல்…. போலீஸ் விசாரணை…!!!

கல்லூரி மாணவரை தாக்கிய 3 பேரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

சேலம் மாவட்டத்தில் உள்ள திருமலைகிரி பகுதியில் விக்னேஷ் என்பவர் வசித்து வருகிறார். இவர் வின்சென்ட் பகுதியில் இருக்கும் சேலம் அரசு கலை கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார். கடந்த 16-ஆம் தேதி விக்னேஷ் கல்லூரி அருகே தனது நண்பர்களுடன் நின்று பேசிக் கொண்டிருந்தார். அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த மூன்று பேர் விக்னேஷை சரமாரியாக தாக்கிவிட்டு அங்கிருந்து தப்பி சென்றனர்.

இதனால் காயமடைந்த விக்னேஷை அக்கம் பக்கத்தினர் மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் கல்லூரி மாணவியை தாக்கிய 3 பேரையும் தீவிரமாக தேடி வருகின்றனர்.

Categories

Tech |