Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

சொந்த ஊருக்கு வந்த வாலிபர்…. குடும்பத்தினருக்கு காத்திருந்த அதிர்ச்சி…. பெரும் சோகம்…!!!

மோட்டார் சைக்கிள் விபத்துக்குள்ளானதில் வாலிபர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கடலூர் மாவட்டத்தில் உள்ள தொளார் கிராமத்தில் நடராஜன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சரவணன் என்ற மகன் இருந்துள்ளார். இவர் சென்னையில் இருக்கும் ஹோட்டலில் காசாளராக பணிபுரிந்து வந்துள்ளார். இந்நிலையில் விடுமுறையை முன்னிட்டு சரவணன் சொந்த ஊருக்கு வந்துள்ளார். இதனையடுத்து மோட்டார் சைக்கிளில் பெண்ணாடம் சென்று விட்டு சரவணன் வீட்டிற்கு வந்து கொண்டிருந்தார்.

இவர் கைகாட்டி அருகே சென்று கொண்டிருந்த போது கட்டுப்பாட்டை இழந்த மோட்டார் சைக்கிளில் இருந்து சரவணன் கீழே விழுந்து படுகாயமடைந்தார். சிறிது நேரத்தில் சரவணன் இறந்துவிட்டார். இதுகுறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று சரவணனின் உடலை மீட்டு திட்டக்குடி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |