கடலூர் மாவட்டத்தில் உள்ள வேளங்கிப்பட்டு கிராமத்தில் விவசாயியான சுந்தரமூர்த்தி(65) என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு சுமதி(50) என்ற மனைவி இருந்துள்ளார். இந்த தம்பதியினருக்கு புஷ்பரோகிணி(19) என்ற மகள் உள்ளார். இவர் அரசு பள்ளி கல்லூரியில் மூன்றாம் ஆண்டு படித்து வருகிறார். இந்நிலையில் சுந்தரமூர்த்தி தனது மகளுக்கும், பெரியாண்டிக்குழி கிராமத்தை சேர்ந்த வாலிபருக்கும் திருமணம் நடத்த முடிவு செய்தார். அதன்படி நாளை அவர்களுக்கு நடைபெற இருந்த நிச்சயதார்த்த நிகழ்ச்சிக்கு தேவையான ஏற்பாடுகளை இரு வீட்டாரும் செய்து கொண்டிருந்தனர். நேற்று முன்தினம் கல்லூரிக்கு சென்ற புஷ்பரோகிணி நீண்ட நேரமாகியும் வீட்டிற்கு திரும்பி வராததால் அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர் அவரை பல்வேறு இடங்களில் தேடி பார்த்தனர்.
அப்போது வேளங்கிப்பட்டு கிராமத்தை சேர்ந்த 24 வயது வாலிபரை புஷ்பரோகிணி காதலித்தார். இதனால் திருமணத்தில் விருப்பம் இல்லாமல் புஷ்பரோகிணி தனது காதலனுடன் சென்றது தெரியவந்தது. இதனை அறிந்த சுந்தரமூர்த்தியும், சுமதியும் மன உளைச்சலில் இருந்துள்ளனர். நேற்று காலை தம்பதியினர் அப்பகுதியில் இருக்கும் வயலுக்கு சென்று விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டனர். இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று சுந்தரமூர்த்தி மற்றும் சுமதி ஆகியோரின் உடல்களை கைப்பற்றி பரங்கிப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.