கலை பற்றி தெரியாதவர்களுக்கு கலைமாமணி விருது வழங்கப்படுவதால் விருதுகளுக்கான மரியாதையே இல்லாமல் போய்விட்டது என மதுரை ஐகோர்ட் நீதிபதிகள் வேதனை தெரிவித்துள்ளனர். மேலும் இயல், இசை, நாடக மன்றம் முறையாக செயல்படுவதில்லை எனவும் இதே போன்ற நிலை நீடித்தால் தமிழ்நாடு இயல், இசை, நாடக மன்றத்தை கலைக்க நேரிடும் என கூறியுள்ளனர்.
மதுரை ஐகோர்ட் நீதிபதிகள் கடந்த 2019 – 2020 -ஆம் வருடம் தகுதி இல்லாதவர்களுக்கு வழங்கிய கலைமாமணி விருதுகளை திரும்ப பெறக்கூடிய வழக்கில் தங்களது வேதனை தெரிவித்துள்ளனர். கடந்த 2021-ஆம் வருடம் வழங்கப்பட்ட கலைமாமணி விருது பற்றியும் தற்போது வழங்கப்பட இருக்கின்ற கலைமாமணி விருது பற்றியும் தமிழ்நாடு இயல், இசை, நாடக மன்ற தலைவர் மற்றும் தமிழ்நாடு சுற்றுலா மற்றும் கலைத்துறை செயலாளர் பதிலளிக்க வேண்டும் என மதுரை ஐகோர்ட் உத்தரவு பிறப்பித்துள்ளது.