சமூகவலைத்தளங்களில் ஒன்றாகிய பேஸ்புக் செயலியை நாட்டில் பெரும்பாலானோர் பயன்படுத்தி வருகின்றனர். இச்செயலியில் பயனர்கள் தங்களது புகைப்படம், வீடியோக்களை பதிவேற்றம் செய்யலாம். அத்துடன் இந்த நிறுவனம் பயனர்களின் பாதுகாப்பை உறுதிசெய்ய பல்வேறு வசதிகளை ஏற்படுத்தி வருகிறது. இதனிடையில் பேஸ்புக் செயலியில் ஊடுருவிய ஹேக்கிங் செயலிகள் கண்டறியப்பட்டு அவை நீக்கப்பட்டு உள்ளது.
மேலும் பேஸ்புக் கடவுச் சொல்லை பிற மொபைல் செயலிகளில் பதிவுசெய்ய வேண்டாம் என அந்நிறுவனம் அறிவுறுத்தி வருகிறது. இந்நிலையில் மற்றொரு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதாவது, பயனர்கள் தங்களின் தேவையற்ற தகவல்களை நீக்கும்படி அறிவுறுத்தி வருகிறது. முன்னதாக பயனர் கணக்கை துவங்குவதற்கு நீண்ட படிவத்தை நிரப்பிய பிறகே அனுமதிக்கப்பட்டனர்.
இப்போது இவற்றில் Religious Views, Political Views, and Address உள்ளிட்ட தகவல்களை அகற்ற இருப்பதாக அறிவித்து இருக்கிறது. அத்துடன் இந்த தகவல்களை பயனர்களின் பக்கத்திலிருந்து நீக்க இருப்பதாகவும் தெரிவித்து உள்ளது. இதை வரும் டிசம்பர் 1ஆம் தேதி முதல் நடைமுறைக்கு கொண்டுவர இருப்பதாகவும் கூறியுள்ளது. அதுமட்டுமின்றி ஏற்கனவே இந்த தகவல்களை பதிவேற்றம் செய்தவர்கள் அகற்றுமாறு அறிவுறுத்தி வருவதாகவும் பேஸ்புக் தெரிவித்துள்ளது.