Categories
மாநில செய்திகள்

மாணவிகளே…! ரூ.1000 உதவித்தொகை பெற…. விண்ணப்பிக்க தவறி விட்டீர்களா….? இவர்களுக்கு மீண்டும் ஓர் வாய்ப்பு…!!!

தமிழக அரசு பள்ளி மாணவர்களுக்காக பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அதிலும் குறிப்பாக நடப்பு வருடத்தில் அரசு பள்ளிகளில் ஆறு முதல் 12 ஆம் வகுப்பு வரை பயின்ற மாணவிகள் மேற்படிப்பு சென்றால் அவர்களுக்கு மாதந்தோறும் ஆயிரம் உதவித்தொகை வழங்கப்படும் என்று முதல்வர் அறிவித்திருந்தார். இந்த திட்டமானது புதுமைப்பெண் திட்டம் என்ற முறையில் நடைமுறைக்கு கொண்டுவரப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின் முதற்கட்டமாக கல்லூரிகளில் ஒரு லட்சத்து 13 ஆயிரம் மாணவிகள் பயன் அடைந்துள்ளார்கள்.

இதுவரை 2, 3 மற்றும் நான்காம் வருடத்தில் படிக்கும் மாணவிகள் மட்டுமே பயன்படுத்தி வந்த நிலையில் தற்போது முதலாம் ஆண்டு படிக்கும் மாணவிகளும் இந்த திட்டத்தில் பயனடையும் விதமாக இணையதளத்தில் விண்ணப்பிக்க ஏற்பாடு செய்யப்பட்டது. தற்போது 2,3 மற்றும் 4ம் ஆண்டு படித்து வரும் மாணவிகளும் ஏற்கனவே விண்ணப்பிக்க தவறி இருந்தால் விண்ணப்பிக்கலாம். இந்த திட்டத்தில் மாதம் மாதம் மாணவிகளின் வங்கி கணக்கில் நேரடியாக உதவித் தொகை வழங்கப்படும். மாணவிகள் விண்ணப்பிக்க www.pudhumaipenn.tn.gov.in என்ற இணையதளத்திற்கு செல்ல வேண்டும்.

Categories

Tech |