Categories
தேசிய செய்திகள்

தேசிய மாநாட்டு கட்சியின் தலைவர் பொறுப்பிலிருந்து… பரூக் அப்துல்லா ராஜினாமா…. காரணம் என்ன?… வெளியான தகவல்….!!!!

ஜம்முகாஷ்மீர் முன்னாள் முதல் மந்திரி பரூக் அப்துல்லா, தேசிய மாநாட்டு கட்சியின் தலைவர் பொறுப்பிலிருந்து ராஜினாமா செய்திருக்கிறார்.

ஜம்முகாஷ்மீர் முன்னாள் முதல் மந்திரி பரூக் அப்துல்லா, தேசிய மாநாட்டு கட்சியின் தலைவர் பொறுப்பிலிருந்து ராஜினாமா செய்து உள்ளார். ஸ்ரீநகரில் தன் கட்சியினர் மத்தியில் உரையாற்றிய பரூக் அப்துல்லா, என் உடல் நலம் காரணமாக கட்சிக்கு தலைமை தாங்க முடியவில்லை என கூறியுள்ளார்.

வருகிற டிசம்பர் 5ம் தேதி கட்சியின் புது தலைவர் தேர்வு செய்யப்படுவார் எனவும் பரூக் அப்துல்லா கூறினார். இதனிடையில் தேசிய மாநாட்டு கட்சியின் அடுத்த தலைவராக அவரது மகனும், முன்னாள் முதல் மந்திரியுமான உமர் அப்துல்லா தேர்வு செய்யபட அதிக வாய்ப்புகள் இருக்கிறது.

Categories

Tech |