Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

கணவர் இறந்த துக்கம்…. மூதாட்டியின் விபரீத முடிவால்…. சோகத்தில் மூழ்கிய குடும்பத்தினர்…!!!

மூதாட்டி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள ரெட்டியபட்டி இந்திரா காலனியில் நல்லம்மாள்(71) என்பவர் வசித்து வந்துள்ளார். இந்த மூதாட்டி மகனான சரவணகுமாரின் பராமரிப்பில் இருந்துள்ளார். கடந்த சில மாதங்களுக்கு முன்பு நல்லம்மாளின் கணவர் முத்து உயிரிழந்ததால் மன உளைச்சலில் இருந்த மூதாட்டி வீட்டிலிருந்த சாணி பொடியை தின்று மயங்கி விழுந்தார்.

இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர் மூதாட்டியை மீட்டு திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி மூதாட்டி பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Categories

Tech |