தேசிய அளவில் மகளிர் கால்பந்து போட்டிகளை விளையாடிய பிரியாவுக்கு காலில் தவறான அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. அதனைத் தொடர்ந்து அவருக்கு வலது கால் அகற்றப்பட்டு பின்னர் மரணமடைந்தார். தவறான சிகிச்சை அளித்த மருத்துவர்கள் இருவரும் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். இந்த நிலையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று மறைந்த கால்பந்து வீரர் ப்ரியாவின் வீட்டிற்கு துக்கம் விசாரிக்க சென்றார்.
அரசு மருத்துவர்களின் கவனக்குறைவால் உயிரிழந்த மாணவி பிரியாவின் பெற்றோரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய முதல்வர், ப்ரியாவின் புகைப்படத்திற்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினார். மேலும் நிவாரணத் தொகையாக 10 லட்சத்துக்கான காசோலையை வழங்கினார்.மேலும் மாணவி ப்ரியாவின் பெற்றோருக்கு வீடு வழங்கும் ஆணையை முதல்வர் ஸ்டாலின் நேரில் சென்று வழங்கினார்