Categories
மாநில செய்திகள்

தமிழக மக்களுக்கு பொங்கலுக்கு வேஷ்டி, சேலை, ரொக்கபரிசு….. படு ஜோராக தயாராகும் ரேஷன் கடைகள்….!!!

தமிழகத்தில் பொங்கல் பண்டிகையானது ஒவ்வொரு வருடமும் ஜனவரி 14-ம் தேதி விமர்சையாக மக்களால் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த நாளில் ஏழை எளிய மக்களுக்கு மகிழ்ச்சி அளிக்கும் விதமாக அரசு சார்பாக பொங்கல் பரிசு பொருட்கள் வழங்கப்படுகிறது. பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ரேஷன் கடைகளில் தமிழக அரசு வேஷ்டி, சேலைகள் வழங்கி வருகிறது. அந்த வகையில் இந்த வருடம் இலவச வேஸ்டி, சேலைகள் உற்பத்திக்கு முதல் தவணையாக 243.96 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தயாரிக்கப்பட்டு வரும் அனைத்து வேஷ்டி சேலைகளின் தரம் பார்த்து அந்தந்த மாவட்டங்களுக்கு அனுப்பி வைக்கும் பணி நடைபெற்று வருகிறது. மேலும் சென்ற வருடம் போல இல்லாமல் இந்த வருடம் ஒவ்வொரு குடும்ப அட்டைதாரருக்கும் ஆயிரம் ரொக்க பரிசு வழங்கப்பட உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. ஏனெனில் சென்ற வருடம் வழங்கப்பட்ட 21 பொருட்களின் தரம் குறைவாக இருந்ததாக புகார் எழுந்ததையடுத்து ரொக்க பரிசு வழங்க உள்ளதாக கூறப்படுகிறது. இதுகுறித்து விரைவில் அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Categories

Tech |