Categories
மாநில செய்திகள்

கால்பந்து வீராங்கனை பிரியா மரணம்…. 2 மருத்துவர்கள் தலைமறைவு…. வெளியான தகவல்….!!!

சென்னை வியாசர்பாடி சேர்ந்த பிரியா தேசிய அளவிலான கால்பந்து போட்டியில் கலந்து கொண்டு பல சாதனைகளை நிகழ்த்தியுள்ளார். இவருக்கு மூட்டு வலி காரணமாக பெரியார் நகர் மருத்துவமனையில் கால்முட்டி சவ்வு சீரமைப்பு அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. அதன் பிறகு காலில் வீக்கம் ஏற்பட்டு உணர்விழப்பு ஏற்பட்டதால் சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனைக்கு உயர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு மேற்கொள்ளப்பட்ட மருத்துவ சோதனையில் அவரது வலது காலில் ரத்த ஓட்டம் தடைபட்டிருப்பது தெரியவந்தது. இதனையடுத்து உயிருக்கு ஆபத்து ஏற்படுவதை தடுப்பதற்காக உடனடியாக அறுவை சிகிச்சை செய்து வலது கால அகற்றப்பட்டது.‌ ஆனால் மாணவி சிகிச்சை பலனின்றி உயிர் இழந்தார். அவரது உயிர் இழப்பு கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் அரசு மருத்துவர்களின் அலட்சியம் மற்றும் தவறான சிகிச்சை காரணத்தால் தான் உயிரிழந்தார் என்று அரசியல் கட்சித் தலைவர்கள் பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இதனையடுத்து கவனக்குறைவாக செயல்பட்ட மருத்துவர்கள் இரண்டு பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் மீது சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்கவும் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் கால்பந்து வீராங்கனை பிரியா மரணத்தின் சஸ்பெண்ட் செய்யப்பட்ட மருத்துவர்கள் சோமசுந்தரம், பால்ராம் சங்கர் ஆகியோர் தலைமறைவாகியுள்ளனர். பணியிடை நீக்க உத்தரவு நகலை வழங்க சென்றபோது மருத்துவர்கள் இரண்டு பேரும் தலைமறைவானது தெரியவந்தது. மேலும் செல்போன் சிக்னலை வைத்து அவர்களின் தற்போதைய இருப்பிடம் குறித்து கண்காணித்து வரும் போலீஷார் இருவரையும் தீவிரமாக தேடி வருகின்றனர்.

Categories

Tech |