7 ஆண்டுகளுக்கு பின் உதித்நாராயண், இசை கலைஞரான டி.இமான் இசையில் பாடல் ஒன்றை பாடியிருக்கிறார்.
பல்வேறு மொழிகளில் பாடல்களைப் பாடி பிரபலமடைந்தவர் உதித்நாராயண். இவர் ஜிவி.பிரகாஷ் இசையில் இது என்ன மாயம் படத்தில் கடைசியாக பாடிய பாடல் “மச்சி மச்சி” என்பதாகும். இதையடுத்து அவர் 7 ஆண்டுகளுக்கு பின் இப்போது பாடியுள்ளார். பொன்ராம் இயக்கத்தில் விஜய்சேதுபதி நடிக்கும் புது படம் டீஎஸ்பி. இத்திரைப்படத்தில் டி.இமான் இசை அமைக்கிறார். இப்படத்தில் அனுகீர்த்தி நாயகியாக நடித்து உள்ளார்.
ஷிவானி நாராயணன், குக்வித் கோமாளி புகழ் போன்றோர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். கார்த்திக் சுப்பு ராஜ் வழங்கும் இப்படத்திற்கு வெங்கடேஷ் ஒளிப்பதிவு செய்துள்ளார். டிசம்பர் மாதத்தில் இந்த படம் வெளியாகும் என தகவல் கூறுகிறது. இத்திரைப்படத்தில் செந்தில் கணேஷ் மற்றும் விஜய் முத்துப்பாண்டி எழுதிய பாடலை பிரபல பாடகர் உதித்நாராயண் பாடியுள்ளார். 7 வருடத்திற்கு பின் அவர் பாடியுள்ள பாடல் இது என்பதால் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு அதிகரித்து உள்ளது.