மனைவி இறந்த அதிர்ச்சியில் கணவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை அயனாவரம் பகுதியில் உள்ள மேட்டு தெருவை சேர்ந்த தம்புசாமி என்பவர் ப்ளம்பர் தொழில் செய்து வருகின்றார். இவருடைய மனைவி பவானி. இவர்களுக்கு யுவஸ்ரீ (22) என்ற மகள் இருக்கின்றார். இந்நிலையில் பவானி நேற்று முன்தினம் இரவு சேத்துப்பட்டில் வசித்து வரும் தனது அக்கா பார்வதியுடன் அயனாவரத்தில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் நடைபெற்ற பிறந்தநாள் நிகழ்ச்சிக்கு சென்றுள்ளார். அங்கு பிரியாணி சாப்பிட்டுவிட்டு இருவரும் வீட்டிற்கு வந்து கொண்டிருந்தபோது திடீரென பவானிக்கு மூச்சு திணறல் ஏற்பட்டுள்ளது. மயங்கி விழுந்த பவானியை அக்கம்பக்கத்தினர் உதவியுடன் மருத்துவமனைக்கு கொன்டு சென்றுள்ளார்.
அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக கூறியுள்ளனர். இதனையடுத்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தம்புசாமி மற்றும் அவருடைய மகள் யுவஸ்ரீ போன்றோரும் பவானியின் உடலை பார்த்து கதறி அழுதனர். இதனை அடுத்து சிறிது நேரத்தில் தம்பு சாமி அங்கிருந்து அமைதியாக விலகி சென்றுள்ளார். பின்னர் யுவஸ்ரீ அவரது செல்போ ன் மூலம்தொடர்பு கொண்ட போது ஸ்விட்ச் ஆப் என வந்தது.
இந்நிலையில் தனது தாயின் உடலை ஆட்டோவில் ஏற்றிக் கொண்டு யுவஸ்ரீ வீட்டிற்கு வந்தபோது வீட்டின் சமையலறையில் தந்தை தம்புசாமி தூக்கு போட்டு தற்கொலை செய்துகொன்டதை பார்த்து அதிர்ச்சி அடைந்துள்ளார். மனைவி இறந்த அதிர்ச்சியில் அவர் தற்கொலை செய்து கொண்டதாக தெரிகின்றது. இது பற்றி தகவல் அறிந்த போலீசார் தம்புசாமி உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.மேலும் இது பற்றி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.