Categories
மாநில செய்திகள்

ஒரே வாரம்தான் கெடு…. திமுக அரசுக்கு எச்சரிக்கை விடுத்த முன்னாள் அமைச்சர் வேலுமணி…..

கோவை குனியமுத்தூரில் உள்ள 87வது வார்டுக்கு உட்பட்ட பகுதியில் மழைநீர் தேங்கியுள்ள பகுதிகளை அதிமுகம் முன்னாள் அமைச்சரும் தொண்டாமுத்தூர் சட்டமன்ற உறுப்பினருமான எஸ்.பி.வேலுமணி நேரில் சென்று பார்வையிட்டார். அப்பகுதி மக்கள் சந்திக்கும் பிரச்சினைகள் குறித்தும் கேட்டறிந்தார். அதன் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அவர், கோவையில் கடந்த 20 நாட்களாக தொடர் மழை பெய்தது. எப்போது மழை பெய்தாலும் அப்பகுதியில் மழைநீர் தேங்கும். அப்பகுதியில் மழைநீர் தேங்க்காமல் இருக்க பாதாள சாக்கடை கொண்டு வரும் திட்டம் இருந்தது. ஆனால் அதிமுக ஆட்சியில் போடப்பட்ட பாதாள சாக்கடை டெண்டர் ரத்து செய்யப்பட்டு விட்டது. இதனால் தான் மழை நீர் தேங்கி நிற்கிறது. அதிமுக ஆட்சியில் மழை நீரை வெளியேற்ற உடனடியாக நடவடிக்கை எடுக்கப்பட்டது. ஆனால் தற்போது அவ்வாறு இல்லை. பாதிப்புகளை பார்வையிடுவது பற்றி மாநகராட்சி ஆணையர், மாவட்ட ஆட்சியரிடம் தகவல் தெரிவித்தேன்.

ஆனால் ஒரு அதிகாரி கூட வரவில்லை. அப்பகுதி மக்கள் கடுமையாக பாதிப்புக்கு ஆளாகியுள்ளனர். இனியாவது சரி செய்ய வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். அதனைத் தொடர்ந்து கோவையை பொறுத்தவரை எந்த சாலையிலும் நடக்க முடியவில்லை. அனைத்து சாலைகளும் மோசமாக உள்ளது. அதிமுக ஆட்சியில் டெண்டர் விடப்பட்ட 500 சாலை பணிகளை ரத்து செய்துள்ளனர். அரசிடம் நிதி இல்லை என்று சொல்லக்கூடாது. கோவை மாவட்ட மக்கள் புறக்கணிக்கப்படுகிறார்கள். மாநகராட்சி நிறுவாகத்திற்கு ஒரு வாரம் கெடு விதிக்கிறோம். அதற்குள் அவர்கள் பணிகளை செய்து முடிக்க வேண்டும. இல்லை என்றால் மிகப்பெரிய உண்ணாவிரதப் போராட்டம் நடத்தப்படும். மழையால் தேங்கிய தண்ணீரை வெளியேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் நாங்கள் செய்த பணிகள் மக்களுக்கு தெரியும். முதல்வர் மு.க. ஸ்டாலின் சொன்னது போல் மக்கள் அவரை பாராட்டவில்லை வாக்குறுதிகள் நிறைவேற்ற வில்லை என்று அவர் தெரிவித்துள்ளார்.

Categories

Tech |