Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

கார் மீது மோதிய லாரி…. முதியவர் பலி; 6 பேர் படுகாயம்…. கோர விபத்து…!!

கார் மீது லாரி மோதிய விபத்தில் முதியவர் பலியான நிலையில், 6 பேர் படுகாயமடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஈரோடு மாவட்டத்திலுள்ள வளந்தாங்கோட்டை பகுதியில் வசிக்கும் 7 பேர் கரூர் நோக்கி காரில் சென்று கொண்டிருந்தனர். இந்நிலையில் க.ஒத்தக்கடை அருகே சென்ற போது ஈரோடு நோக்கி வந்த லாரியும், காரும் நேருக்கு நேர் பயங்கரமாக மோதியது. இந்த விபத்தில் படுகாயமடைந்த ரவிக்குமார் என்பவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதனையடுத்து உயிருக்கு போராடிக் கொண்டிருந்த கார்த்திக், செந்தில், சசிதரன், சங்கர், சரவணன், குப்புசாமி ஆகிய 6 பேரையும் அக்கம் பக்கத்தினர் மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.

அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த விபத்து குறித்து தகவலறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று ரவிக்குமாரின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இந்த விபத்து குறித்து வழக்குபதிவு செய்த போலீசார் தப்பி ஓடிய லாரி ஓட்டுநரை தீவிரமாக தேடி வருகின்றனர்.

Categories

Tech |