மத்திய அரசு ஊழியர்களுக்குரிய 7வது ஊதியக்குழுவின் பரிந்துரைகளானது நாடு முழுதும் உள்ள ஊழியர்களுக்கு பொருந்தும். இதனிடையில் ஊழியர்களும் அதன் பலனைப் பெற்று வருகின்றனர். இருப்பினும் தங்களுக்கு பரிந்துரைக்கப்பட்டதைவிட குறைவான சம்பளம் கிடைப்பதாக ஊழியர்கள் இடையில் ஒரு புகார் இருக்கிறது.
இதுகுறித்து மகஜர் தயாரித்துவருவதாகவும், விரைவில் அரசிடம் சமர்ப்பிக்கப்படும் எனவும் ஊழியர் சங்கங்கள் தெரிவிக்கிறது. இந்த குறிப்பாணையிலுள்ள பரிந்துரைகளின் அடிப்படையில், சம்பளத்தை உயர்த்தவேண்டும் (அ) 8வது ஊதியக்குழுவை கொண்டுவர வேண்டும் என கோரிக்கை விடுக்கப்படும்.
மற்றொருபுறம் 8வது ஊதியக் கமிஷனை அமல்படுத்துவது குறித்த எந்த யோசனையும் இப்போது இல்லை என அரசாங்கம் திட்டவட்டமாக கூறி விட்டது. இப்போது 7வது ஊதியக் குழுவுக்கு பின் புது ஊதியக்குழுவானது வராதென தகவல் தெரிவிக்கிறது. எனினும் அதற்கு மாறாக அரசு ஊழியர்களின் சம்பளத்தை தானாக உயர்த்தும் முறையினை அரசு அமல்படுத்தப்போகிறது என்றும் தகவும் வெளியாகியுள்ளது.