Categories
தேசிய செய்திகள்

காப்பகத்தில் குழந்தைகளின் மதம், பெயர் மாற்றம்…. தேசிய ஆணையம் வெளியிட்ட அதிர்ச்சி தகவல்…!!!!!

ராஜஸ்தானில் காணாமல் போன 27 பெண்கள் விபச்சாரத்தில் தள்ளப்பட்டிருக்கலாம் என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

மத்திய பிரதேசத்தில் உள்ள ரெய்சன் மாவட்டத்தில் அமைந்துள்ள குழந்தைகள் காப்பகத்திற்கு தேசிய குழந்தை மனித உரிமை பாதுகாப்பிற்கான ஆணையத்தின் தலைவர் பிரியங்கா கனூங்கோ சமீபத்தில் ஆய்வு மேற்கொண்டுள்ளார். பின்னர் அவர் ட்விட்டரில் செய்தி ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் கூறப்பட்டிருப்பதாவது, இந்த ஆய்வின் மூலமாக காப்பகத்தில் உள்ள 3 குழந்தைகளின் மதம் மற்றும் அவர்களுடைய பெயர்கள் மாற்றம் செய்யப்பட்ட விவரம் தெரியவந்துள்ளது. மேலும் அவர்களின் பெயரில் புதிய ஆவணங்கள் மற்றும் மத நம்பிக்கைகள் உருவாக்கப்பட்டுள்ளது.

இதற்கு முன்பாக அவர் ராஜஸ்தானின் பில்வாரா மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு கிராமத்தில் இளம்பெண்களை விலைக்கு வாங்கி விற்கும் அவலம் பற்றி அறிந்து, அங்கு விசாரணைக்கு சென்றுள்ளார். அப்போது இளம்பெண்கள் கட்டாயத்தின் பேரில் விபச்சாரத்தில் தள்ளப்பட்ட குற்றச்சாட்டும் இருக்கிறது என கூறியுள்ளார். அந்த கிராமத்தில் இருந்து 27 இளம்பெண்கள் காணாமல் போனது பற்றி தெரியவந்துள்ளது. மேலும் 2019 -ஆம் வருடம் இந்த கிராமத்தில் பெரிய அளவில் கும்பலாக பெண்களை விபச்சாரத்திற்கு விற்கும் அவலங்கள் நடைபெற்றுள்ளது தெரியவந்ததாக அவர் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

Categories

Tech |