Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

“காவலாளி” மீது கொலைவெறி தாக்குதல் நடத்திய “கொள்ளையர்கள்”… போலீஸ் விசாரணை…!!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள குமாரபுரம் பகுதியில் முருகையன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தோட்டப்பட்ட ஆஞ்சநேயர் கோவில் எதிரே இருக்கும் பழைய இரும்பு கடையில் காவலாளியாக பணிபுரிந்து வந்துள்ளார். சம்பவம் நடைபெற்ற அன்று கடையில் கொள்ளையடிக்க முயன்ற 2 பேரை முருகையன் தடுத்து நிறுத்தியுள்ளார். இதனால் கோபமடைந்த இரண்டு பேரும் முருகையனை மண்வெட்டி மற்றும் இரும்பு குழாயால் பயங்கரமாக தாக்கிவிட்டு அங்கிருந்து தப்பி சென்றனர்.

இதனால் படுகாயமடைந்த முருகையன் புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். இதுகுறித்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் தோட்டப்பட்டு பழைய காலனியைச் சேர்ந்த திவாகரன்(19) மற்றும் வல்லவன்(20) ஆகிய இரண்டு பேரையும் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதற்கிடையே சிகிச்சை பெற்று வந்த முருகையன் பரிதாபமாக உயிரிழந்தார். இதனால் இந்த வழக்கை போலீசார் கொலை வழக்காக மாற்றி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |