Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

படிக்காமல் இதை செய்யலாமா….? பிளஸ்-2 மாணவியை கண்டித்த தாய்…. பின் நடந்த அதிர்ச்சி சம்பவம்…!!!

12- ஆம் வகுப்பு மாணவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கடலூர் மாவட்டத்தில் உள்ள கடம்பூர் பகுதியில் செந்தில்குமார் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கௌரி(17) என்ற மகள் இருந்துள்ளார். இந்த சிறுமி அரசு மேல்நிலைப் பள்ளியில் 12-ஆம் வகுப்பு படித்து வந்துள்ளார். நேற்று முன்தினம் படிக்காமல் விளையாடிக் கொண்டிருந்த கௌரியை அவரது தாய் மங்களநாயகி கண்டித்துள்ளார். இதனால் மன உளைச்சலில் இருந்த கௌரி தனது வீட்டில் இருந்த விஷத்தை குடித்து மயங்கி விழுந்தார்.

இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த பெற்றோர் கௌரியை மீட்டு காட்டுமன்னார்கோவில் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி கௌரி பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Categories

Tech |