தமிழ் சினிமாவில் நடிகர் அஜித்தின் என்னை அறிந்தால் என்ற திரைப்படத்தின் மூலம் பிரபலமானவர் நடிகை பார்வதி நாயர். இவர் உத்தமவில்லன், நிமிர்ந்து நில், சீதக்காதி உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். இவர் சென்னையில் உள்ள நுங்கம்பாக்கம் பகுதியில் வசித்து வருகிறார். கடந்த சில நாட்களுக்கு முன்பாக பார்வதியின் வீட்டில் வேலை பார்த்த நபர் வீட்டில் இருந்த சில விலையுயர்ந்த பொருட்களை திருடியுள்ளார்.
அதன்படி 5 லட்சம் மதிப்பிலான கைக்கடிகாரம், 3 லட்சம் மதிப்பிலான கைக்கடிகாரம், ரூபாய் 50 ஆயிரம் மதிப்புள்ள லேப்லட் மற்றும் செல்போன் போன்றவைகள் திருடப்பட்டுள்ளது. இது குறித்து காவல் நிலையத்தில் நடிகை பார்வதி புகார் கொடுத்துள்ள நிலையில், போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.
இந்நிலையில் நடிகை பார்வதியின் வீட்டில் திருட்டு சம்பவம் நடந்தது தொடர்பாக சில ஊடகங்கள் தவறான செய்திகளை வெளியிடுவதாக தற்போது அவர் குற்றம் சாட்டியுள்ளார். இதன் காரணமாக தவறான செய்திகளை வெளியிடும் ஊடகங்கள் மீது அவமதிப்பு வழக்கு மற்றும் அவதூறு வழக்கு தொடரப்படும் என்று நடிகை பார்வதியின் தரப்பிலிருந்து எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.