Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

உயிருக்கு போராடிய பசுமாடு…. துரிதமாக செயல்பட்ட தீயணைப்பு வீரர்கள்….. தோட்ட உரிமையாளருக்கு அறிவுரை…!!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள சுள்ளிமேட்டுபதி பகுதியில் ஜெயந்தி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சொந்தமான பசுமாடு நேற்று அப்பகுதியில் இருக்கும் தோட்டத்தில் மேய்ந்து கொண்டிருந்தது. அப்போது எதிர்பாராதவிதமாக 50 அடி ஆழமுடைய கிணற்றில் பசுமாடு தவறி விழுந்து தண்ணீரில் தத்தளித்து கொண்டிருந்தது.

இதனை பார்த்த பொதுமக்கள் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தீயணைப்பு வீரர்கள் 1 மணி நேர போராட்டத்திற்கு பிறகு கயிறு கட்டி பசுமாட்டை பத்திரமாக மீட்டனர். இதனையடுத்து திறந்தவெளியில் இருக்கும் கிணற்றை சுற்றி வேலி அமைக்குமாறு தோட்ட உரிமையாளர்களுக்கு தீயணைப்பு துறையினர் அறிவுரை வழங்கியுள்ளனர்.

Categories

Tech |