தமிழகம், புதுவை, காரைக்கால் பகுதிகளில் நவம்பர் பத்தாம் தேதி முதல் 13ஆம் தேதி வரை பெரும்பாலான பகுதிகளில் கனமழை பெய்யும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்ட நிலையில் உருவான காற்றழுத்த தாழ் பகுதி ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுவடைந்துள்ளதாகவும், இது வட மேற்கு திசையில் நகர்ந்து இன்று அதிகாலை தமிழகம் புதுச்சேரி இடையே கரையை கடக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் தமிழகத்தில் அடுத்த மூன்று மணி நேரத்திற்கு 26 மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், நீலகிரி, கோவை, திருப்பூர், காஞ்சி, திருவள்ளூர் , சென்னை, திருவண்ணாமலை, வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், கள்ளக்குறிச்சி, சேலம், தர்மபுரி , கிருஷ்ணகிரி, திருச்சி, புதுக்கோட்டை, பெரம்பலூர், மதுரை, தேனி மற்றும் குமரி உள்ளிட்ட மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக தெரிவித்துள்ளது.