தமிழகம், புதுவை, காரைக்கால் பகுதிகளில் நவம்பர் பத்தாம் தேதி முதல் 13ஆம் தேதி வரை பெரும்பாலான பகுதிகளில் கனமழை பெய்யும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்ட நிலையில் உருவான காற்றழுத்த தாழ் பகுதி ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுவடைந்துள்ளதாகவும், இது வட மேற்கு திசையில் நகர்ந்து இன்று அதிகாலை தமிழகம் புதுச்சேரி இடையே கரையை கடக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனால் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் உள்ளிட்ட மாவட்டங்களில் அதிக கன மழை பெய்ய வாய்ப்புள்ளது. எனவே இந்த மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்ட நிலையில், கனமழை காரணமாக 26 மாவட்டங்களில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. அதன்படி சென்னை, திருவள்ளூர், கடலூர், காஞ்சிபுரம், விழுப்புரம், வேலூர், அரியலூர், மயிலை, நீலகிரி, திருவாரூர், திருச்சி, சேலம், நீலகிரி, பெரம்பலூர், கரூர், புதுக்கோட்டை. தஞ்சை, தருமபுரி, கள்ளக்குறிச்சி, தி.மலை, திண்டுக்கல், தேனி. கோவை, திருப்பத்தூர் & ராணிப்பேட்டையில் இன்று பள்ளி கல்லூரிகள் செயல்படாது.