தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கி கடந்த சில நாட்களாக மழை பெய்து வரும் நிலையில் 5 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட், 19 மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கி கடந்த சில நாட்களாக பெய்து வருகிறது. இதனால் பல்வேறு மாவட்டங்களில் கனமழை தொடர்ந்து பெய்து வருகிறது. இந்நிலையில் தமிழகத்தில் கடலூர், மயிலாடுதுறை, தஞ்சை, திருவாரூர், நாகை ஆகிய 5 மாவட்டங்களுக்கு இந்திய வானிலை ஆய்வு மையம் ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுத்துள்ளது. தமிழகத்தில் 5 மாவட்டங்களில் அடுத்த 24 மணி நேரத்திற்கு ரெட் அலர்ட் கொடுக்கப்பட்டுள்ளது.
மேலும் காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவண்ணாமலை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, தர்மபுரி, திருவள்ளூர், சென்னை, வேலூர், ராணிப்பேட்டை, சேலம், பெரம்பலூர், அரியலூர், திருச்சி, சிவகங்கை, ராமநாதபுரம், புதுக்கோட்டை ஆகிய 19 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.