Categories
உலக செய்திகள்

மதுபான விடுதியில் திடீர் துப்பாக்கிச் சூடு… கொடூர சம்பவத்தில் 9 பேர் பலி… பெரும் சோகம்…!!!!!!

மதுபான விடுதியில் நடந்த திடீர் துப்பாக்கி சூடு சம்பவத்தில் 9 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

மெக்சிகோவில் அபசியோ எல் ஆல்டோ என்னும் நகரில் மதுபான விடுதி ஒன்று செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. இந்த விடுதிக்குள் கடந்த புதன் கிழமை இரவு 9 மணி அளவில் ஆயுதம் ஏந்திய கும்பல் ஒன்று திடீரென புகுந்து துப்பாக்கிச் சூடு சம்பவம் நடத்தியுள்ளது. இந்த சம்பவத்தில் மதுபான விடுதியில் இருந்த 9 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் இரண்டு பெண்கள் காயமடைந்துள்ளனர்.

இதனை அடுத்து காயமடைந்த பெண்கள் மருத்துவமனையில்  சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களது உடல்நிலை தற்போது சீராக உள்ளது. ஆனால் இந்த  துப்பாக்கி சூடு சம்பவம் நடத்தியவர்கள் யார் என்பது இதுவரை அடையாளம் காணப்படவில்லை. மேலும் இந்த துப்பாக்கி சூடு சம்பவம் நடைபெற்ற பகுதிக்கு மாநில மற்றும் மத்திய பாதுகாப்பு படை பிரிவுகள் அனுப்பப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Categories

Tech |