Categories
தேசிய செய்திகள்

வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில்…. டிக்கெட் கட்டணம் எவ்வளவு தெரியுமா?…. இதோ முழு விவரம்….!!!!

இந்தியாவில் ஐந்தாவது வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயிலை பிரதமர் மோடி இன்று தொடங்கி வைத்தார். இந்த அதிவேக ரயில் சென்னை மற்றும் மைசூர் இடையே இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. பெங்களூரு கே எஸ் சி ஆர் ரயில் நிலையத்தில் இன்று காலை 10.20 மணிக்கு வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் மற்றும் பாரத் கௌரவ் காசி தர்ஷன் ரயில் சேவை தொடங்கப்பட்டது. இந்த ரயிலில் சென்னையிலிருந்து மைசூருக்கு எகனாமி வகுப்புக்கு 921 ரூபாய் கட்டணம். எக்ஸிக்யூட்டிவ் கட்டணம் 1880 ரூபாயாக இருக்கும் என கூறப்பட்டுள்ளது. மைசூரிலிருந்து பெங்களூருக்கு எகனாமி வகுப்புக்கு 368 ரூபாயும் எக்ஸிக்யூட்டி வகுப்புக்கு 768 ரூபாயும் கட்டணம் வசூலிக்கப்படும்.

இந்த ரயில் சென்னையிலிருந்து காலை 5.50 மணிக்கு புறப்பட்டு ஏழு புள்ளி 21 மணிக்கு காட்பாடி சந்திப்பை சென்றடையும். பின்னர் அங்கிருந்து 7.25 மணிக்கு புறப்பட்டது ஜோலார்பேட்டை ஸ்டேஷனுக்கு 8.25 மணிக்கு பெங்களூரு சந்திப்புக்கு 10.15 மணிக்கு சென்று பிறகு 10.20 மணிக்கு அங்கிருந்து புறப்படும். இந்த ரயில் மைசூருக்கு 12.20 மணிக்கு சென்றடையும். வாரத்தில் புதன்கிழமை தவிர மற்ற ஆறு நாட்களும் சென்னையில் இருந்து பெங்களூருக்கு மைசூரு வரை வந்த பாரத் எக்ஸ்பிரஸ் ரயில் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |