Categories
மாநில செய்திகள்

அனைத்து கட்சி கூட்டம்: அழைப்பு விடுத்த ஸ்டாலின்…. புறக்கணித்த இபிஎஸ்…. எதற்காக தெரியுமா?….!!!!

சென்னையில் நாளை நடைபெற இருக்கும் அனைத்து கட்சி கூட்டத்தை புறக்கணிப்பதாக அதிமுக அறிவித்து இருக்கிறது. உயர்ஜாதி ஏழைகளுக்கு வழங்கப்பட்ட 10 சதவீதம் இட ஒதுக்கீடு செல்லும் என்ற உயர் நீதிமன்ற தீர்ப்பு தொடர்பாக ஆலோசிக்க நாளை(நவ..12) அனைத்துக் கட்சி கூட்டத்திற்கு தமிழக அரசு அழைப்பு விடுத்திருக்கிறது. இந்நிலையில் 10 சதவீத இடஒதுக்கீடு விவகாரத்தில் திமுக இரட்டை வேடம் போடுவதாக குற்றம்சாட்டி அதிமுக புறக்கணித்து இருக்கிறது.

சென்னை தலைமைச் செயலகத்திலுள்ள நாமக்கல் கவிஞர் மாளிகையில் வைத்து  நாளை காலை 10:30 மணியளவில் இந்த கூட்டம் நடைப்பெற உள்ளது. இந்த அனைத்துக்கட்சி கூட்டத்தில் ஒவ்வொரு அரசியல் கட்சி சார்பாக வும் 2 பிரதிநிதிகள் கலந்துகொள்ள அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |