Categories
மாநில செய்திகள்

வலுவடைந்தது காற்றழுத்த தாழ்வு பகுதி….. வட தமிழக மாவட்டங்களுக்கு RED ALERT…!!!!

தமிழகத்தில் கடந்த 29ஆம் தேதி முதல் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. இந்த நிலையில் வங்க கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுவடைந்துள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக தமிழகம் மற்றும் புதுவையில் நேற்று முதல் கனமழை பெய்து வருகிறது.

தமிழகம், புதுவை, காரைக்கால் பகுதிகளில் நவம்பர் பத்தாம் தேதி முதல் 13ஆம் தேதி வரை பெரும்பாலான பகுதிகளில் கனமழை பெய்யும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்ட நிலையில் உருவான காற்றழுத்த தாழ் பகுதி ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுவடைந்துள்ளதாகவும், இது வட மேற்கு திசையில் நகர்ந்து நாளை அதிகாலை தமிழகம் புதுச்சேரி இடையே கரையை கடக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் உள்ளிட்ட மாவட்டங்களில் அதிக கன மழை பெய்ய வாய்ப்புள்ளது. எனவே இந்த மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டது.

Categories

Tech |