கிணற்றில் தவறி விழுந்து பெண் இன்ஜினியர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஈரோடு மாவட்டத்திலுள்ள வெள்ளிதிருப்பூர் குரும்பபாளையம் பகுதியில் ராமசாமி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கோகுல பிரியா என்ற மகள் இருந்துள்ளார். பிஇ பட்டதாரியான கோகுல பிரியா கிணற்றில் இருந்து தண்ணீர் எடுப்பதற்காக மின் மோட்டாரை இயக்க சென்றுள்ளார். அப்போது எதிர்பாராதவிதமாக பிரியா 60 அடி ஆழமுடைய கிணற்றில் தவறி விழுந்ததால் சத்தம் போட்டுயுள்ளார்.
அவரது சத்தம் கேட்டு ஓடி வந்த அக்கம் பக்கத்தினர் உடனடியாக தீயணைப்பு வீரர்களுக்கு தகவல் தெரிவித்தனர். அதற்குள் பிரியா தண்ணீரில் மூழ்கி இறந்துவிட்டார். பின்னர் தீயணைப்பு வீரர்கள் அரை மணி நேர போராட்டத்திற்கு பிறகு பிரியாவின் உடலை மீட்டனர். இதனையடுத்து போலீசார் இளம்பண்ணின் உடலை அந்தியூர் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்கு பதிந்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.