மொபட் மீது லாரி மோதிய விபத்தில் பெண் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள ஆத்துமேடு கொங்கு நகரில் சாமியாத்தாள்(55) என்பவர் வசித்து வந்துள்ளார். நேற்று காலை சாமியாத்தாள் தனது தம்பி மகனான சேகர் என்பவருடன் பூதிபுரத்தில் இருக்கும் தோட்டத்திற்கு மொபட்டில் சென்று கொண்டிருந்தார். இந்நிலையில் அய்யர்மடம் அருகே சென்ற போது கரூர் நோக்கி வேகமாக சென்ற லாரி மொபெட் மீது பயங்கரமாக மோதியது. இந்த விபத்தில் படுகாயமடைந்த சாமியாத்தாள் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்துவிட்டார்.
இதனையடுத்து உயிருக்கு போராடி கொண்டிருந்த சேகரை அக்கம் பக்கத்தினர் மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து தகவலறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சாமியாத்தாளின் உடலை மீட்டு வேடந்தூர் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். இந்த விபத்து குறித்து வழக்குபதிவு செய்த போலீசார் தப்பி ஓடிய லாரி ஓட்டுநரை தீவிரமாக தேடி வருகின்றனர்.