Categories
தேசிய செய்திகள்

18 வருஷமா குழந்தை இல்லாததால் டார்ச்சர்…. பெண் போட்ட அதிரடி பிளான்…. அதிர்ந்துபோன குடும்பத்தினர்….!!!!

உத்திரபிரதேசத்தின் இடாவா மாவட்டத்தில் உதிமோர் பகுதியில் வசித்துவரும் 40 வயது பெண்ணுக்கு திருமணமாகி 18 வருடங்கள் ஆகியும் குழந்தை இல்லை. இதன் காரணமாக அவரது குடும்பத்தினர் தொடர்ந்து அப்பெண்ணை புண்படுத்தி வந்திருக்கின்றனர். இதனால் அப்பெண் மன உளைச்சலுக்கு ஆளாகினார். இந்த நிலையில் சமூக சுகாதார மையத்துக்கு சென்று பரிசோதனை செய்துவிட்டு திரும்பிய அப்பெண், குடும்பத்தினரிடம் கர்ப்பமடைந்த தகவலை கூறியுள்ளார்.

இதற்காக அப்பெண் சென்ற 6 மாதங்களாக விடாமல் மருத்துவ பரிசோதனையும் செய்துகொண்டார். இதற்கிடையில் வீட்டிற்கு புதுவாரிசு வரபோகும் மகிழ்ச்சியில் குடும்பத்தினர் இருந்துள்ளனர். இந்நிலையில் கர்ப்பிணியான 6 மாதத்தில் தனக்கு வயிறு வலிக்கிறது என்று அப்பெண் கூறி, அவரது குடும்பத்தினரை குழப்பினார். அதன்பின் திடீரென்று குழந்தை குறைபிரசவத்தில் பிறந்துள்ளது எனக்கூறி அப்பெண் ஒன்றை கொடுத்துள்ளார்.

அந்த குழந்தையின் தொப்புள்கொடி அறுபட்டும், முகம் மற்றும் உடல்தோற்றம் விகாரத்துடன் காணப்பட்டது. இதை பார்த்து அதிர்ச்சியடைந்த பெண்ணின் குடும்பத்தினர், அதை வாங்கி துணியால் சுற்றி சுகாதார மையத்துக்கு பரிசோதனைக்கு கொண்டுசென்றனர். அதன்படி அதை வாங்கி பரிசோதித்த மருத்துவர், அது குழந்தை அல்ல எனவும் பிளாஸ்டிக் பொம்மை எனவும் கூறி அதிர்ச்சி ஏற்படுத்தினார். மேலும் கர்ப்பம் குறித்த ஆவணங்களை வாங்கிபார்த்த மருத்துவர், எக்ஸ்ரே உள்ளிட்ட அனைத்தும் போலியானவை என்று கூறியுள்ளார்.

இது தொடர்பாக மருத்துவர் ஹர்சித் கூறியதாவது, அப்பெண் கர்ப்பகால பரிசோதனைக்கு வரவில்லை. அதாவது, வயிற்றில் ஏற்பட்ட பாதிப்புக்காக சிகிச்சை செய்ய வந்து சென்றுள்ளார் என கூறியுள்ளார். திருமணம் நடந்து நீண்ட காலமாகியும் குழந்தை இல்லாத சூழ்நிலையில், பலரும் பல விதத்தில் பேசுவதில் இருந்து தப்பிக்க இந்த நாடக அரங்கேற்றம் செய்துள்ளார் என்று மருத்துவர் கூறி தெளிவுப்படுத்தியுள்ளார். பிளாஸ்டிக் பொம்மைக்கு வண்ணம் பூசி குழந்தை போன்று மாற்றி, குறைபிரசவத்தில் பிறந்த குழந்தை எனகூறி, அதை தன் குடும்பத்தினரிடம் அப்பெண் கொடுத்துள்ள விபரமும் பின்பு தெரியவந்துள்ளது.

Categories

Tech |