Categories
சற்றுமுன் தேசிய செய்திகள்

BREAKING : ஜிஎஸ்எல்வி ராக்கெட் ஏவுவது ஒத்திவைப்பு …..!!

நாளை ஏவ இருந்த ஜிஎஸ்எல்வி எப்- 10 ராக்கெட் ஏவும் நடவடிக்கை ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

பூமி கண்காணிப்பு , இயற்கை வளங்களைக் கண்டறிதல் , காடு வளங்களைக் கண்டறிதல் உள்ளிட்டவை குறித்த ஆய்வை மேற்கொள்ள இஸ்ரோ சார்பில் உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்டது ஜிஎஸ்எல்வி எப்- 10 ராக்கெட். இது நாளை மாலை 5.43 மணிக்கு விண்ணில் ஏவ திட்டமிடப்பட்டு இருந்தது. இஸ்ரோ அனுப்பிய 76 ராக்கெட்டுகளில் இதுதான் அதிகப்படியான உயரமாகும் , சுமார் 16 மாடி உயரத்திற்கு தயாரிக்கப்பட்ட்தாக இஸ்ரோ தெரிவித்து இருந்தது.

பேரிடர் மேலாண்மை குறித்து முக்கூட்டியே ஆய்வு நடத்தி புகைப்படம் எடுத்து அனுப்பும் வசதி கொண்ட இந்த ஜிஎஸ்எல்வி எப்- 10 ராக்கெட் ஏவுவதற்கான நடவடிக்கைகளை இஸ்ரோ மேற்கொண்டு வந்தது. அதற்கான அனுமதி சீட்டுகள் கூட வழங்கப்பட்ட நிலையில் இன்று திடீரென்று தொழில்நுட்ப கோளாறு காரணமாக ஏவும் பணி ரத்து செய்யப்படுவதாக  இஸ்ரோ தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்து இருக்கிறார்கள்.

Categories

Tech |