Categories
தூத்துக்குடி மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

தூத்துக்குடி மாவட்டத்தில்…. இன்று முதல் மறு அறிவிப்பு வரும் வரை…. வெளியான முக்கிய அறிவிப்பு….!!!!

வங்க கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு மையம் காரணமாக சென்னையில் இன்று கனமழையும் 11 மற்றும் 12ம் தேதி மிக கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. மேலும் 13ஆம் தேதி ஓரிரு பகுதிகளில் மிக கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது. இன்று அநேக இடங்களிலும் 11,12,13ஆம் தேதிகளில் கனமழை முதல் மிக கனமழை வரை பெய்ய வாய்ப்பு உள்ளது.

வடக்கு கடலோர மாவட்டங்களிலும் அதை ஒட்டியுள்ள பகுதிகளிலும் மிக கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது. இந்த நிலையில் கனமழை மற்றும் புயல் எச்சரிக்கை காரணமாக தூத்துக்குடி மாவட்டத்தில் இன்று முதல் மறு அறிவிப்பு வரும் வரை மீனவர்கள் மீன் பிடிக்க செல்ல வேண்டாம் என்று மீன்வளத் துறை அறிவுறுத்தி உள்ளது.

Categories

Tech |