பச்சிளம் குழந்தை கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மஹாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள அகோலா பகுதியில் வசித்து வரும் பெண் ஒருவர் பிறந்து 20 நாட்களேயான குழந்தையை சிகிச்சைக்காக அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளார். அங்கு குழந்தையை பரிசோதித்த மருத்துவர்கள் குழந்தை ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்துள்ளனர்.
மேலும் போலீசாருக்கும் தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின்படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் குழந்தையின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அந்த பிரேத பரிசோதனை அறிக்கையில் குழந்தையை கழுத்தை நெரித்து கொலை செய்திருப்பது தெரியவந்தது. இதுகுறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் அந்த பெண்ணிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.