Categories
மாநில செய்திகள்

பத்திரிகையாளர்களுக்கு சூப்பர் குட் நியூஸ்… அரசு வெளியிட்ட அசத்தல் அறிவிப்பு…!!

தமிழகத்தில் செய்தி மக்கள் தொடர்பு துறை சார்பில் பத்திரிக்கையாளர் நல வாரிய கூட்டம் செய்தித் துறை அமைச்சர் சுவாமிநாதன் தலைமையில் தலைமைச் செயலகத்தில் இன்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பத்திரிகையாளர்கள் நலன் காக்கக்கூடிய வகையில் பத்திரிகையாளர் நல வாரியம் அமைக்கப்பட்டும் நலத்திட்ட உதவிகள் வழங்க ஏதுவாக பத்திரிகையாளர் நல வாரியம் குழு அமைக்கும் ஆணைகள் வெளியிடப்பட்டது. அதனை தொடர்ந்து இந்த கூட்டத்தில் மிக முக்கியமாக நல வாரியத்தின் புதிய உறுப்பினர்களின் சேர்க்கை குறித்து விவாதிக்கப்பட்டது. கடந்த சில தினங்களுக்கு முன்பு வெளியான பத்திரிக்கையாளர் நலவாரிய உறுப்பினர் சேர்க்கை தொடர்பான அறிவிப்பு அரசாங்க அடையாள அட்டை வைத்திருக்கக்கூடிய பத்திரிகையாளர் மட்டும் இடம் பெறுவார்கள் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.

ஆனால் இன்று நடைபெற்ற கூட்டத்தில் பத்திரிக்கையாளர் மற்றும் தொலைக்காட்சிகளில் பணிபுரிய கூடிய அனைத்து நிலை ஊழியர்களுக்கும் பத்திரிகையாளர் நல வாரியத்தில் உறுப்பினர் அடையாளம் அட்டை வழங்க ஏதுவாக அனைத்து நிலை ஊழியர்களையும் பத்திரிகையாளர் நல வாரியத்தில் சேர்ப்பது குறித்து ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் ஒரு நிறுவனத்தில் 10 பேர் மட்டுமே நல வாரிய உறுப்பினராக சேர முடியும் என்ற நிலை மாறி தற்போது பத்திரிகை நிறுவனங்களில் பணிபுரிய கூடிய செய்தியாளர், ஒளிப்பதிவாளர், ஆசிரியர், உதவி ஆசிரியர், ஆடியோ இன்ஜினியர் உள்ளிட்ட அனைத்து நிலைகளிலும் இருக்கக்கூடிய ஊழியர்களை பத்திரிக்கையாளர் நல வாரியத்தில் சேர முடியும். இது குறித்து அதிகாரப்பூர்வமான அறிவிப்பு ஓரிரு நாட்களில் வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Categories

Tech |