வாக்காளர் பட்டியலில் திருத்தம் செய்யும் பணி இன்று தொடங்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் ஆண்டுதோறும் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்படுவது வழக்கம். இந்த பட்டியல் திருத்தம் செய்யப்பட்டு அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும். அதேபோல் இந்த ஆண்டு வாக்காளர் பட்டியலில் திருத்தம் செய்யும் பணி இன்று தமிழக முழுவதும் தொடங்கியது. இது குறித்து அதிகாரி ஒருவர் கூறியதாவது. 3.14 கோடி பெண் வாக்காளர்களும், 3.03 கோடி ஆண் வாக்காளர்களும் உள்ளனர்.
இந்நிலையில் அதிகமாக சோழிங்கநல்லூர் தொகுதியில் 6.6 லட்சம் வாக்காளர்களும், குறைந்தபட்சமாக துறைமுகம் தொகுதியில் 1.72 லட்சம் வாக்காளர்களும் உள்ளனர். ஆனால் தற்போது 2. 44 லட்சம் இறந்த வாக்காளர்களின் பெயர்கள் நீக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் பட்டியலில் பெயர் மாற்றம், முகவரி திருத்தம், புதிய வாக்காளர் பெயர் சேர்ப்பு போன்ற மனுக்களை அடுத்த மாதம் 8-ஆம் தேதிக்குள் அளிக்கலாம் என அவர் கூறியுள்ளார்.