இந்தியா-பாகிஸ்தான் இடையே டி20 உலகக் கோப்பை இறுதிப் போட்டியைப் பார்க்க விரும்பவில்லை என்று இங்கிலாந்து கேப்டன் ஜோஸ் பட்லர் தெரிவித்துள்ளார்..
ஜோஸ் பட்லர் தலைமையிலான இங்கிலாந்து அணி, டி20 உலகக் கோப்பையின் இரண்டாவது அரையிறுதியில் நாளை (வியாழன்) அடிலெய்டு ஓவல் மைதானத்தில் இந்திய அணியை எதிர்கொள்கிறது. இந்த ஆட்டத்தில் வெற்றி பெறும் அணி, முதல் அரையிறுதியில் வெற்றிபெற்றுள்ள பாகிஸ்தான் அணியுடன் மோதும். இறுதிப்போட்டியில் நுழைவதற்காக இரு அணி வீரர்களும் தீவிர வலைப்பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். இதற்கிடையே இந்தியா பாகிஸ்தான் இறுதிப் போட்டியில் மோதும் என்று ரசிகர்கள் தங்களது கருத்துக்களை சமூக வலைதளங்களில் கூறி வருகின்றனர். அதேபோல சில முன்னாள் கிரிக்கெட் வீரர்களும் இதைத்தான் எதிர்பார்க்கின்றனர்.
இந்நிலையில் இந்தியாவுக்கு எதிரான போட்டிக்கு முன்னதாக, இங்கிலாந்து கேப்டன் ஜோஸ் பட்லர் பேசியதாவது, “நாங்கள் விரும்பிய நிலைக்கு வந்துவிட்டோம். அனைவரும் அரையிறுதியில் விளையாடுவதில் ஆர்வமாக உள்ளனர். வெளிப்படையாக, ஒரு சிறந்த இந்திய அணிக்கு எதிரான போட்டியில் நாங்கள் மிகவும் உற்சாகமாக இருக்கிறோம். அத்தகைய சூழ்நிலையில் இருக்க நாங்கள் விரும்புகிறோம். இந்தியா-பாகிஸ்தான் இடையே டி20 உலகக் கோப்பை இறுதிப் போட்டி நடைபெறாமல் இருக்க தன்னால் முடிந்த அனைத்தையும் செய்வேன். “பாருங்கள், நாங்கள் நிச்சயமாக இந்தியா மற்றும் பாகிஸ்தான் இறுதிப் போட்டியைப் பார்க்க விரும்பவில்லை என்றார்..
மேலும் அவர் “இந்தியா மிகவும் வலிமையான அணி. இந்திய அணி மிக நீண்ட காலமாகவே நிலையாக உள்ளன. இயற்கையாகவே, அவர்கள் நல்ல திறமையானவர்கள். அவர்களின் வரிசையில் அற்புதமான வீரர்கள் உள்ளனர் என்றார்..