நாடு முழுவதும் உள்ள விவசாயிகளுக்கு பிரதான் மந்திரி கிசான் சம்மன் நிதி யோஜனா திட்டத்தின் கீழ் ஒவ்வொரு வருடமும் 6 ஆயிரம் ரூபாய் நிதி உதவி வழங்கப்பட்டு வருகிறது. இந்த நிதி உதவி மூன்று தவணைகளாக 2000 ரூபாய் வீதம் விவசாயிகளின் வங்கி கணக்கில் நேரடியாக டெபாசிட் செய்யப்படுகிறது.
இந்த திட்டத்தின் கீழ் இதுவரை 12 தவணைகள் வழங்கப்பட்டுள்ள நிலையில் 13வது தவணை எப்போது கிடைக்கும் என விவசாயிகள் அனைவரும் காத்திருக்கின்றனர். டிசம்பர் 1 முதல் மார்ச் 31 வரை உள்ள காலத்தில் 13-வது தவணை வெளியாகலாம் என கூறப்படுகிறது. இந்தத் திட்டத்தின் கீழ் நீங்கள் ஏதாவது சிக்கலை எதிர்கொண்டால் அதனை விரைவில் தீர்த்துக் கொள்ள முடியும். இதற்கு ஹெல்ப்லைன் எண் அழைப்பதன் மூலமாக அல்லது மெயில் ஐடியில் அஞ்சல் மூலமாக தீர்வு காணலாம்.
ஹெல்ப்லைன் எண்- 155261, 1800115526 அல்லது 011-23381092 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.
மின்னஞ்சல் ஐடி – [email protected]
மேலும் இத்திட்டத்தில் நீங்கள் இதுவரை விண்ணப்பிக்கவில்லை என்றால் pmkisan.gov.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்திற்குச் சென்று பதிவு செய்யலாம்.