இந்தியாவில் மாற்றுத்திறனாளிகளுக்கு உதவும் விதமாக மத்திய மற்றும் மாநில அரசுகள் பல திட்டங்களை செயல்படுத்தி வருகின்றன. அதேசமயம் கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் இவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்பட்டு வருகிறது. அது மட்டுமல்லாமல் அரசு பணிகளில் இட ஒதுக்கீடு சலுகையும் வழங்கப்படுகிறது. இந்நிலையில் தமிழக அரசு கடந்த வருடம் மாற்றுத்திறனாளிகளுக்கான ஓய்வூதியத்தை 3000 ரூபாயாக உயர்த்தியது.
அதனைப் போலவே கடும் ஊனமுற்ற மாற்றுத்திறனாளிகளுக்கு மாதம் 5 ஆயிரம் ரூபாய் மாதாந்திர ஓய்வூதியம் அதிகரிக்கப்பட்ட நிலையில் தற்போது புதுவையிலும் மாற்றுத்திறனாளிகளுக்கு மாதம் 3000 ரூபாய் ஓய்வூதியம் வழங்கப்பட்டு வருகின்றது. இதனைத் தொடர்ந்து தற்போது தெலுங்கானா மாநில அரசு மாற்றுத்திறனாளிகளுக்கு தலா 3000 ரூபாய் ஓய்வூதியமாக வழங்கப்படும் என அறிவித்துள்ளது. இந்த திட்டம் அம்மாநில மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.