கொரோனா வைரஸ் எதிரொலியால் சீனா, இத்தாலி உட்பட 12 நாடுகளில் இருந்து சுற்றுலா விசாவில் இந்தியா வர தடை விதிக்கப்பட்டள்ளதாக தமிழக சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் தெரிவித்துள்ளார்.
கொரோனா வைரஸ் பாதிப்பு கரணமாக நாடு முழுவதும் பன்னாட்டு விமனநிலையங்களில் பயணிகளை தீவர பரிசோதனைக்கு உட்படுத்துமாறு மத்தியஅரசு உத்தரவிட்டுள்ளது.
அதன்படி சென்னை விமானநிலையங்களில் விமானத்தில் இறங்கும் பயணிகளை கண்காணிக்கவும், பரிசோதனை செய்யவும் பன்னாட்டு விமானநிலையங்களில் தனியாக மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
சென்னை விமான நிலையங்களில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள எச்சரிக்கை நடவடிக்கை ஆகியவற்றை தமிழக சுகாதாரதுறை செயலாளர் பீலா ராஜேஷ் ஆய்வு செய்தார். அதன்பிறகு செய்தியாளர்களை சந்தித்த அவர் மாநில சுகாதாரதுறை மூலம் கிராமப்புறங்களில் கொரோனா வைரஸ் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் தெரிவித்தார் .