சமூகநீதி கொள்கைகள் செயல்படுத்த குழு அமைத்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
தமிழக அரசு பணிகளில் அனைத்து நிலைகளிலும் சமூக நீதிக் கொள்கைகளை செயல்படுத்த குழு அமைத்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. உச்சநீதிமன்ற மாநில அரசு கூடுதல் வழக்கறிஞர் தலைமையில் சட்ட நிபுணர்கள், மூத்த வழக்கறிஞர்கள், அரசு அலுவலர்கள் மற்றும் பிற அலுவலர்களை உள்ளடக்கிய குழுவை நியமித்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.