Categories
தேசிய செய்திகள்

மக்களே மிஸ் பண்ணிடாதீங்க…. நாளை வானில் நடக்கும் அதிசயம்…. வெளியான அறிவிப்பு…!!!!

நாளை சூரிய கிரகணம் நிகழ உள்ளது.

ஆண்டுதோறும் சூரிய கிரகணத்தை போல் சந்திர கிரகணம் வருவது வழக்கம். இந்நிலையில் முழு சந்திரன் தோன்றும் நாளில் சூரியன், பூமி, சந்திரன் ஆகிய மூன்று கோள்களும் ஒரே நேர்கோட்டில் வரும். அதைப்போல் நாளை சந்திர கிரகணம் நிகழ உள்ளது. இந்நிலையில் அமெரிக்கா, வட அமெரிக்கா, ஆஸ்திரேலியா, ஆசியா, வடக்கு அட்லாண்டிக் பெருங்கடல் உள்ளிட்ட பகுதிகளில் வசிக்கும் மக்கள் முழு கிரகணத்தை காணலாம். இந்த கிரகணத்தின் ஆரம்ப நிலையை இந்தியாவின் எந்த பகுதியில் இருந்தும் காண இயலாது.

ஆனால் பகுதி அளவு சந்திர கிரகணத்தை கொல்கத்தா,  கோஹிமா உள்ளிட்ட நாட்டின் கிழக்கு மற்றும் வடகிழக்கு பகுதியில் இருந்து காணலாம். இந்நிலையில் கிரகணத்தின் பிற்பகுதி நிலைகள் மற்றும் முடிவு மட்டுமே நாட்டின் பிற பகுதிகளில் இருந்து காண முடியும். இதனையடுத்து இந்திய நேரப்படி பிற்பகல் 2.39 மணியளவில் சந்திர கிரகணம் தொடங்குகிறது. முழு சந்திர கிரகணம் பிற்பகல் 3.46 மணியளவில் தொடங்கி 5.12 மணி வரை இருக்கும். பின்னர் பகுதி அளவு கிரகணம்  6.19 மணியில் முடிவடைகிறது. இந்நிலையில் கிரகணத்தின் உச்சநிலையை மாலை 4.29 மணி அளவில் காணலாம். அதில் தமிழகத்தில் சென்னையில் மட்டுமே இதை காண முடியும்.

Categories

Tech |