வரும் 11ம் தேதி 50,000 விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்பு திட்டத்தை முதலமைச்சர் மு க ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார் என்று மின்சார துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார்.
விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்பு வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில் 50 ஆயிரம் விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்பு தொடர்பான திட்டத்தை வரும் 11ஆம் தேதி கரூர் அரவக்குறிச்சியில் முதலமைச்சர் ஸ்டாலின் தொடங்கி வைப்பார் என அறிவிக்கப்பட்டுள்ளது.
கரூரில் மின்சார துறை அமைச்சர் செந்தில் பாலாஜி செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், தமிழக முதலமைச்சர் மாண்புமிகு தளபதி அவருடைய ஆணைக்கிணங்க 2021 – 22 ஆம் ஆண்டு மின்சார துறையின் உடைய மானிய கோரிக்கையில் 1 லட்சம் விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்பு வழங்கப்படும் என்று அறிவிப்பு வெளியிடப்பட்டு மாண்புமிகு முதலமைச்சர் உடைய திருக்கரங்களால் மின் இணைப்பு வழங்குவதற்கான ஆணைகளை வழங்கி ஓராண்டில் 1 லட்சம் விவசாயிகளுக்கு மின் இணைப்பு என்ற மிகப்பெரிய வரலாற்று சிறப்புமிக்க பணிகளை 6 மாதத்தில் நிறைவு செய்து, இதே அரங்கத்தில் மாண்புமிகு முதலமைச்சர் உடைய திருக்கரங்களால் ஒரு லட்சம் விவசாயிக்கான மின் இணைப்புக்கான உத்தரவை மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் வழங்கினார்கள் என்றார்.
அதன் தொடர்ச்சியாக 20223 ஆம் ஆண்டு 50,000 விவசாயிகளுக்கான இலவச மின் இணைப்பு வழங்கப்படும் என்ற மகத்தான அறிவிப்பு மாண்புமிகு முதலமைச்சர் உடைய ஆணைக்கிணங்க சட்டமன்றத்தில் அறிவிக்கப்பட்டன. சட்டமன்றத்தில் அறிவிக்கப்பட்ட 50,000 விவசாயிகளுக்கான இலவச மின் இணைப்பு வழங்கக்கூடிய சிறப்பு வாய்ந்த திட்டத்தை வருகின்ற 11.12.2022 கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி தடா கோவில் பகுதியில் காலை 10 மணிக்கு மாண்புமிகு முதலமைச்சர் உடைய திருக்கரங்களால் 50,000 விவசாயிகளுக்கான இலவச மின் இணைப்பு வழங்கக்கூடிய மகத்தான திட்டத்தை மாண்புமிகு தளபதி அவர்கள் தொடங்கி வைக்கின்றார்கள்.
இந்த சிறப்பு வாய்ந்த திட்டத்தின் மூலமாக ஏற்கனவே ஒரு லட்சம் விவசாயிகளுக்கான மின் இணைப்பு இப்போது 50,000 விவசாயிகளுக்கான மின் இணைப்பு என ஒட்டுமொத்தமாக ஒன்றரை லட்சம் விவசாயிகளுக்கான மாண்புமிகு முதலமைச்சர் உடைய நல்ல உத்தரவோடு ஆசியோடு ஆணைக்கிணங்க விவசாயிகளுக்கு வழங்கி ஒரு மகத்தான சாதனையை மின்சார வாரியம் நிகழ்த்தி வருகிறது. தேர்தலில் கொடுக்கப்பட்ட வாக்குறுதி, சட்டமன்றத்தில் அறிவிக்கப்பட்ட அறிவிப்புகள் அதனை நிறைவேற்றக்கூடிய வகையில் வருகின்ற 11ஆம் தேதி முதலமைச்சர் திருக்கரங்களால் இந்த இலவச மின் இணைப்பு திட்டம் தொடங்கப்படுகிறது என்று கூறினார்.