Categories
சென்னை மாவட்ட செய்திகள்

பள்ளியின் சுற்றுச்சுவரில்…. ஓவியத்தை தீட்டி அசத்தும் திருநங்கைகள்…. பாராட்டும் பொதுமக்கள்….!!!!

சென்னை மாவட்டத்தில் கத்திவாக்கம் பகுதியில் அரசு மேல்நிலைப்பள்ளி ஒன்று அமைந்துள்ளது. இந்த பள்ளியில் படித்த பழைய மாணவர்கள் மற்றும் எண்ணூர் மக்கள் நல சங்கத்தைச் சேர்ந்தவர்கள் இணைந்து அப்பள்ளியில் வெளிப்புறச் சுவற்றில் ஓவியம் வரைந்து அழகுப்படுத்த முடிவு செய்துள்ளனர். மேலும் இந்த பணியை “திருநங்கை துதிகை குழு” என்ற குழுவிடம் அவர்கள் ஒப்படைத்துள்ளனர். இதனை தொடர்ந்து திருநங்கைகளான ஸ்மித்தா அபிமுக்தா, வர்ஷா, காஞ்சனா ஆகியோர் தமிழர்களுடைய பாரம்பரியம் மற்றும் கலை பண்பாட்டினை ஓவியமாக வரைந்து அசத்தி உள்ளனர்.

இது குறித்து திருநங்கை அபிமுக்தா கூறியதாவது “எண்ணூர் மக்கள் நல சங்கத்தின் மூலம் எங்களுக்கு இந்த வாய்ப்பு கிடைத்துள்ளது. சமூகத்தில் திருநங்கைகள் என்று கூறினாலே பாலியல் தொழில் செய்பவர்கள் அல்லது யாசகம் பெறுபவர்கள் என்ற எண்ணம் தான் முழுவதும் பரவி இருக்கிறது. இதனை மாற்றுவதற்காக நாங்கள் இந்த அமைப்பை தொடங்கியுள்ளோம். மேலும் பள்ளியின் சுற்றுச்சுவரை ஜல்லிக்கட்டுகள், திருவள்ளுவர், ஔவை பாட்டி, சேரர், சோழர், பாண்டியர், தஞ்சை பெரிய கோவில் சித்திரம், கோவில் யானை போன்ற தமிழர்களின் பாரம்பரியம் மற்றும் கலை பண்பாட்டினை வரைந்துள்ளோம். இந்த ஓவியங்களை சுவரில் வரைவதன் மூலம் வரும் தலைமுறையினருக்கு நமது பாரம்பரியத்தை கொண்டு சேர்க்க முடியும்” என்று அவர் கூறியுள்ளார்.

Categories

Tech |