தமிழ் சினிமாவின் பிரம்மாண்டம் என்று சொன்னாலே அது இயக்குனர் சங்கர் தான். ஜென்டில்மேன் என்ற திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமான சங்கர் தன்னுடைய ஒவ்வொரு படத்திலும் பிரம்மாண்டத்தை வைப்பதற்கு தவறவே மாட்டார். அதன் பிறகு இயக்குனர் சங்கரின் படம் என்றாலே, கண்டிப்பாக சூப்பர் ஹிட் தான். அந்த வகையில் தன்னுடைய முதல் படத்திலேயே தனக்கான முத்திரையை பதித்த சங்கர் இந்தியன், எந்திரன் போன்ற பல சூப்பர் ஹிட் படங்களை இயக்கியுள்ளார். இவர் தற்போது இந்தியன் 2 மற்றும் ஆர்சி 15 போன்ற படங்களை இயக்கி வருகிறார்.
இந்த 2 படங்களின் வேலையும் முடிந்த பிறகு இயக்குனர் சங்கர் வேள்பாரி நாவலை மையமாக வைத்து 3 பாகங்களாக படத்தை இயக்க இருப்பதாக சமீப காலமாகவே தகவல் வெளியாகி வருகிறது. சுமார் 1000 கோடி பட்ஜெட்டில் வேள்பாரி நாவலை படமாக்க சங்கர் திட்டமிட்டுள்ள தாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில் வேள்பாரி படத்தில் நடிக்கும் நடிகர்கள் குறித்த தகவல் தற்போது வெளியாகியுள்ளது. அதன்படி நடிகர் சூர்யா மற்றும் கேஜிஎப் நாயகன் யஷ் ஆகியோர் கதையின் நாயகர்களாக நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. மேலும் பிரம்மாண்ட இயக்குனரின் படத்தில் 2 மாஸ் ஹீரோக்கள் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.